தமிழகத்தில் செப் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு – வெளியான தகவல்கள்!!

0
TASMAC bar
TASMAC bar

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 18 ஆம் தேதியில் டாஸ்மாக் பார்கள் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக் பார்கள்

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் போடா பட்ட ஊரடங்கு தற்போது செப்டம்பர் 30 வரை பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை செவிசாய்த்த அரசு பல தளர்வுகளை வெளியிட்டது. இதனால் இ பாஸ் ரத்து, பேருந்து சேவைகள் அறிவிக்கப்பட்டன. மேலும் கடந்த மே மாதத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் 4000 க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து பார்களை திறக்க அனுமதியளிக்கப்படவில்லை.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

TASMAC
TASMAC

மேலும் தற்போது அரசு வெளியிட்ட தடை உத்தரவில் பார்கள் தடை பற்றி எதுவும் கூறவில்லை. மேலும் பார்களை திறக்க உரிமையாளர்கள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் 18 ஆம் தேதியில் டாஸ்மாக் பார்கள் திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக இடைவெளியுடன் பார்கள் நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு வரும் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here