ரேஷன் கார்டில் 6 மாத சரக்கு 1 நாளில் விநியோகம் – அரசு புதிய யுக்தி.!

0

இந்தியாவில் கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் அதிகம் நம்பி இருப்பது ரேஷன் கடைகளை மட்டுமே. இந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்றவற்றின் மூலம் தான் பல ஏழைகளின் அடுப்பு எரிகிறது. கொரோனா தொற்றின் காரணமாக 75 கோடி ரேஷன் கார்ட் பயனர்கள் 6 மாத சரக்கை வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

என் எஃப் எஸ் ஏ சட்டம்

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி, ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும் என மானிய விலையில் இந்தியாவில் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்தியாவில் மட்டும் 5 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன.

ஒரு மாதத்திற்கு ரேஷன் கார்ட்களில் 5 கிலோ தானியங்கள் என 75 கோடி ரேஷன் கார்டு பயனர்களுக்கு வழங்கப்படும். மானிய விலையில் அரசால் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் செலவிடுகிறது.

ரேஷன் கார்டு

மேலும் மக்கள் 2 மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள முடிந்தது. தற்போது பஞ்சாபில் கொரோனா காரணமாக 6 மாதத்திற்கான அனைத்து பொருட்களையும் வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் 6 மாதத்திற்கு தேவையான கோதுமை, அரிசி, பருப்பு, சர்க்கரை போற்றவற்றை விரைவில் வழங்க அனுமதிக்கப்படும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சொல்லி இருக்கிறார்.

அரசு கையில் சுமார் 272 டன் அரிசி மற்றும் 162 டன் கோதுமை உணவு தானியங்கள் இருக்கிறதாம். கொரோனா வைரஸ் பிரச்சனையால், ரேஷன் கடைகளில், மக்கள் நெரிசலை சமாளித்து, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு , மாநில அரசுகளுக்குச் சொல்லி இருக்கிறார்களாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here