அடிக்கடி திட்டியதால் ஆத்திரம் அடைந்த ஊழியர்.., நெஞ்சில் கத்தியால் குத்தி ஓட்டம்.., பரபரப்பு சம்பவம்!!

0
அடிக்கடி திட்டியதால் ஆத்திரம் அடைந்த ஊழியர்.., நெஞ்சில் கத்தியால் குத்தி ஓட்டம்.., பரபரப்பு சம்பவம்!!
அடிக்கடி திட்டியதால் ஆத்திரம் அடைந்த ஊழியர்.., நெஞ்சில் கத்தியால் குத்தி ஓட்டம்.., பரபரப்பு சம்பவம்!!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை அதிக டைம் வேலை கொடுத்து அதற்கான ஊதியங்களை தர மறுக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் நன்றாக வேலை பார்த்தாலும் ஆபாச சொற்களை கூறி அவர்களின் மன அழுத்தத்தை தூண்டி விடுகின்றனர். இதனால் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர், முதலாளியை கொலை செய்யவும் முயற்சி செய்கின்றனர். அதே போல் ஒரு சம்பவம் தான் தாய்லாந்து நாட்டில் அரங்கேறியுள்ளது. அதாவது, தாய்லாந்தில் ஆரோம் புன்னனை என்பவரிடம் பாதுகாப்புக் காவலராகப் பணியாற்றி வந்தவர் சாவத் ஸ்ரீராட்சலாவ். ஆரோம் புன்னனை பணி விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக நடந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அதிக நேரம் பணி செய்ய அவரை தொடர்ந்து கட்டாய படுத்துவதும், கோபத்துடன் திட்டுவதும் என சாவத் ஸ்ரீராட்சலாவ்வை கொடுமை படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சாவத் ஸ்ரீராட்சலாவ் முதலாளியை பழிவாங்க நினைத்துள்ளார். அதன்படி தாய்லாந்தில் பேமஸான லும்பினி பூங்காவில் வாகன நிறுத்துமிடத்தில் ஆரோம் புன்னனை தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சாவத் ஸ்ரீராட்சலாவ் அங்கு சைக்கிளில் வந்தார். அதன் பின்னர் ஆரோம் புன்னனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறார். உடனே ஆரோம் புன்னனையை இடது மார்பில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட அதானி குழுமம்.., 100 பில்லியன் டாலர் இழப்பு.., அதலபாதாளத்திற்கு சென்ற நிறுவனம்!!!

அதெல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, சாவத் ஸ்ரீராட்சலாவ்வை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாக்குமூலம் கொடுத்தாவது, வெகு காலமாக என் ஓனர் மீது ஆத்திரம் இருந்தது. என்னை எப்ப பார்த்தாலும் திட்டி கொண்டே இருப்பார். அதனால் நான் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தேன். இரவு கூட எனக்கு தூக்கம் வராது. அவர் திட்டியது மட்டும் தான் மைண்ட்ல ஓடிட்டே இருக்கும். அதை தாங்க முடியாமல் தான் அவரை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here