இந்திய சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், கிராபிக் டிசைனர் என ஏகப்பட்ட திறமையுடன் திரை துறையில் இருந்து வருபவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சந்திரமுகி, சண்டக்கோழி, சிவகாசி போன்ற பல படங்களுக்கு கிராபிக் டிசைனராக இருந்து வந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் பின்னர் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 படங்களை இயக்கியதன் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியுள்ளார். இது போக ஓச்சர் பிக்சர் ப்ரொடக்ஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
தளபதினாலே தாறுமாறுனு நிரூபிச்சுட்டாரு..,ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய “தளபதி 67”!!
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வழிபாட்டில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு திருச்செந்தூர் கடலில் தங்களின் பாதத்தை நனைத்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். இவர்களின் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram