நாட்டில் அதிக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதன் காரணமாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் எல்லைகளில் மிக கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாகவே அதிக அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இதனை தடுக்க மருத்துவர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மாநில அரசுகளும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பல மாநிலங்களில் தங்களது மாநிலத்திற்குள் வரும் எல்லையில் சோதனை சாவடிகளை அமைத்துள்ளன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா அரசு பிற மாநிலங்களில் இருந்து தன் மாநிலத்திற்கும் கொரோனா நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்சிற்கு தடை என்று அறிவித்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
திருவனந்தபுரத்தில் ரெட் அலர்ட் – கடல் பகுதியில் ஏற்படும் கடுமையான சூழல்!!
ஆனால் இந்த தடையை தற்போது தெலுங்கானா நீதிமன்றம் நீக்கியது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனைகளில் முதற்கட்டமாக அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் முன்னுரிமை அடிப்பையில் தான் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.