வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகம், கேரள பகுதியில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
கடந்த மாதம் முதல் தமிழகத்தில் எதிர்பாராத வகையில் கடுமையான மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே தமிழகம், கேரளா பகுதியில் சூறைக்காற்றுடன் மழைபெய்து வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதன் எதிரொலியாக கடலுக்குள் மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்றே தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து இன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு தற்போது ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இறப்பதற்கு கடைசி நேரத்திலும் ஆடிப்பாடிய கொரோனா நோயாளி – இணையத்தையே கண்கலங்க வைத்த சிங்கப்பெண்!!
கடல் பகுதியில் தற்போது கடுமையான சூழல் நிலவுவதால் கடலோர பகுதியில் உள்ள ஷங்குமுகம் சாலைகள் நீர் நிரம்பி வருகிறது. எனவே திருவனந்தபுரத்தில் ரெட் அலர்ட் விதிக்கப்பட்ட காரணமாக மக்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.