சாதனை படைத்த போபண்ணா, மிடில்கூப்.., இறுதி போட்டியில் வாகை சூடுவார்களா ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
சாதனை படைத்த போபண்ணா, மிடில்கூப்.., இறுதி போட்டியில் வாகை சூடுவார்களா ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
சாதனை படைத்த போபண்ணா, மிடில்கூப்.., இறுதி போட்டியில் வாகை சூடுவார்களா ?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

டெல் அவிவ் டென்னிஸ் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஜோடி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

டெல் அவிவ் டென்னிஸ்

ஆண்களுக்கான டெல் அவிவ் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் , இந்தியாவின் ரோகன் போபண்ணா, மாட்வே மிடில்கூப் ஜோடி – பிரான்கோ சுகோர், டெனிஸ் மோல்சனோவ் ஜோடியை எதிர்கொண்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 4-6, 7-6, 10-6 என்ற கணக்கில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்த ஜோடி அரையிறுதி ஆட்டத்திலும் சாண்டியாகோ மற்றும் மோல்டெனி ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இதில் இந்தியாவின் போபண்ணா மற்றும் மாட்வே மிடில்கூப் ஜோடி முதன் முறையாக முன்னேறியதன் மூலம் சாதனை படைத்துள்ளனர்.

இதே போன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஜோகோவிச், குரேஷி வீரர் மாரின் சிலிக்கை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையில் நடைபெற்ற அதிரடி ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here