மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். அண்மைக்காலமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் வர்ஜீனியாவை தலைமையிடமாகக் கொண்ட DXC டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களை TCS நிறுவனம் திருடியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று (நவ.28) விசாரித்த நீதிபதிகள், “DXC டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், இந்நிறுவனத்திற்கு டிசிஎஸ் நிறுவனம் 210 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளனர்.