இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள், தங்கள் பணத்தை சேமிக்க வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக வளர்ச்சி திட்டங்களை நம்பி இருக்கின்றன. அந்த வகையில் வரி இல்லாமல் சேமிக்கும் திட்டத்தை பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அறிமுகப்படுத்தி உள்ளனர். இதனால் பலரும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் திருமணமானவர்கள் மனைவி அல்லது கணவர் பெயரில் நீங்கள் PPF ஐத் திறந்தால் முதலீட்டை இரண்டு மடங்காக பெறலாம்.
அது எப்படி என்றால் PPF இல் வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கு கிடைக்கும்.அதன் படி கணவர் பெயரில் .1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதே போன்று மனைவி பெயரிலும் ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். ஆனால் இந்த இரண்டு கணக்குகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் கிடைக்கும். இதனால் முதலீட்டு வரம்பு இரண்டு மடங்காக ரூ.3 லட்சம் வரை அதிகரிக்கும். எனவே இந்த அதிரடி வாய்ப்பை திருமணமானவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம்., இந்த குற்றத்திற்காகவா?