டாடா நிறுவனத்தின் புதிய மாடலான டாடா சஃபாரி கார் தற்போது இந்திய சந்தையில் பார்வைக்காக கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியாகியுள்ளது.
டாடா சஃபாரி:
வாடிக்கையாளர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருந்த டாடா சஃபாரி கார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா சந்தையில் நேற்று பொது பார்வைக்காக கொண்டுவரப்பட்டது. முன்னதாக இந்த மாடல் கிராவிட்டாஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு சஃபாரி என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி காரின் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த காரில் 6 மற்றும் 7 பேர் அமரும் வகையில் வெர்சன்கள் கிடைக்கும். மேலும் இந்த கார் 2.0 லிட்டர் டீசல் இஞ்சினை பெற்றுள்ளது. இந்த காரில் எலக்ட்ரானிக் பார்க்கிங் வசதியை டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரை டையர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ஹில் டெசண்ட் கொன்றோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது. தற்போது இது 3 இருக்கைகள் கொண்ட வெர்சன் என்பதால் சஃபாரியின் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரையில் ‘சூரரைப் போற்று’ – இன்று திரையிடல்!!
புதிய ஸ்பிலிட் எல்இடி ஹெட்லேம்புகள், எல்இடி பகல் நேர விளக்குகள் போன்றவற்றை சஃபாரி பெற்றுள்ளது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் புதிய அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் தொடர்ச்சியாக சஃபாரி கார் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. இந்த கார் வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. விரைவில் இதற்கான விலை பற்றிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.