தமிழகத்தில் கொரோனா தடை நீங்கி தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், ஊர்வலம் என தடைகள் இன்றி காவல்துறையின் அனுமதியின் பேரில் நடந்து வருகிறது. இந்த நாட்களில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் கூட்டங்கள் நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் நிறுவனர் பசுபதி பாண்டியன் ஜென்ம விரோதத்தால் திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இதனால் வருகிற ஜனவரி 10ம் தேதி அன்று பசுபதி பாண்டியனின் 11வது நினைவு தினம் நடைபெற உள்ளது. இன்றளவும் உண்டாகி வரும் இந்த மோதலால் வருடந்தோறும் பரபரப்பாகவே இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சாலை விதியை மதிக்காத GP முத்து.., கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்!!!
இதனால் பொதுமக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை ஜனவரி 10ம் தேதியன்று விதிக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அன்று டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி மது கடத்தல், பதுக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.