மது பிரியர்களே குட் நியூஸ்.., இனி மறைமுகமாக உட்கார்ந்து தண்ணி அடிக்க வேண்டாம் – டாஸ்மாக் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!

0

டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தில் சில்லறை கடைகள் வாயிலாக, மதுக்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் அரசு நடத்தி வரும் கடைகளை ஒட்டிய பார்களில் தின்பண்டம், குளிர்பானம் விற்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சமீபத்தில் சில்லறை வியாபாரம் செய்யும் 500 டாஸ்மாக் கடைகளையும், டெண்டர் விவகாரமாக 500 பார்களையும் அரசு அதிரடியாக மூடியது.

மேலும் பார்களை திறக்க நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 3200 மது விற்பனைக் கடைகளில் மது பார்கள் அமைக்க இணைய வழியில் டெண்டர் விட இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி மதியம் 2 மணி வரை ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here