விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் ஜெயித்ததால், கோதை குடும்பமே உக்கிரத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக அர்ஜுன் தான் உச்சகட்ட கோவத்தில் உள்ளார்.
கோதைக்கு அர்ஜுன் மீது கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. அவரை கண்காணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது இப்பொழுது நடேசன் கோதைக்கு அர்ஜுனின் ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைக்க ஆரம்பித்து விடுவாராம்.
அடுத்தடுத்து ஆர்டரை பெறுவதற்காக தமிழ் கம்பெனிக்கு எந்த ஆர்டரும் போய்விட கூடாது என்பதற்காகவும் பல Fraud தனமும் செய்வாராம் அர்ஜுன். இதனால் கோதையிடம் வசமாக சிக்கி விடுவாராம். ஒருகட்டத்திற்கு மேல் கோதை அர்ஜுனை வீட்டை விட்டு வெளியேற்றும் அளவிற்கு போவாராம். அர்ஜுனுக்கு இதற்கு மேல் தான் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்து கொண்டுள்ளது.