மக்களே உஷார்.., அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0
மக்களே உஷார்.., அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
மக்களே உஷார்.., அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிக மழையால் நீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் இன்று முதல் ஜூலை 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான சென்னை, திருவாரூர், நாகை, காஞ்சி, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here