தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து உள்ளார். மேலும் டிவி வாயிலாக நடத்தப்பட உள்ள வகுப்புகள் தொடர்பாகவும் அமைச்சர் பேசியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை சரி செய்வதற்காக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் டிவி வாயிலாக வகுப்புகள் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களில் சேர கிளிக் செய்யவும்
சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்தது – முதல்வர் பழனிசாமி!!
மேலும் ஆகஸ்ட் 3ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து ஆலோசித்து அட்டவணை வெளியிடப்படும் எனவும், மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கொரோனா பரவல் குறைந்த பிறகே ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.