கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட இத்தாலி தனது பொது முடக்க உத்தரவை அக்டோபர் 15 வரை நீடித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு:
உலக மக்களை அதிகமாக பதித்து வந்த கொரோனா பாதிப்பு, பரவலாக எல்லா நாடுகளுக்கும் பரவி வந்தது. அதிலும், இத்தாலியில் 35,000 பேர் கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். இது இத்தாலி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால அங்கு நாடுதழுவிய பொது முடக்கம் பின்பற்றபட்டு வந்தது. நாளையுடன் இந்த பொது முடக்கம் முடிய உள்ள நிலையில், அடுத்த கட்டமாக இத்தாலி நாட்டின் பிரதமர், பிரதமர் கியூசெப் கோன்டே ஆலோசனை கூட்டத்தில் பொது முடக்கம் வரும் அக்டோபர் 15 தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:
மேலும் இத்தாலி நட்டு பிரதமர், பிரதமர் கியூசெப் கோன்டே கூறியதாவது, ” நாட்டில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இன்னும் நிலைமை தெரிவிரமாக இருந்தால், அரசு தலையிட்டு பொது முடக்கத்தை இன்னும் நீடிக்கும்.
அவசர கால நிலை மூலமாக தான் அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் தகுந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய காலத்திற்கான விதிமுறைகள் அமைச்சர்கள் குழுவின் உறுப்பினர்களால் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.” என்று தெரிவித்து உள்ளார்.