தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரித்து வருவதால், அநேக இடங்களில் கனமழை விடிய விடிய பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கும் சூழல் ஏற்படுவதால், பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 25) விடுமுறை எனவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களே…, அரசு வேலையை பெற இது தான் உங்களுக்கான எளிய வழி…, மிஸ் பண்ணிடாதீங்க!!