தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் குழந்தைகளை பாலியல் ரீதியான குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் கல்வி முறையை அமல்படுத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முக்கிய உத்தரவு:
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அரசு சார்பில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. இதற்கான முறையான தகுந்த காரணம் சிறு வயது முதல் பாலியல் ரீதியான விழிப்புணர்வு இல்லாமை தான் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விழிப்புணர்வு முறையாக ஏற்பட்டால் இந்த பிரச்சனை குறைவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதே உண்மை.
இது போக கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வந்தது குறித்த விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக கல்வித்துறை இயக்குனர்களுக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளனர். நீதிபதிகள் வழங்கிய இந்த முக்கிய அறிவுரை பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதாவது, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவுக்கு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் மற்றும் இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த குற்றங்கள் நடைபெற காரணம், போதுமான சட்ட அறிவு குறித்து விழிப்புணர்வு இன்மையே என மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்