தெலுங்கு திரையுலகையே கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா. முதல் திரைப்படமே அவருக்கு ஏக வரவேற்பை பெற்று தந்தது. இதன் மூலம் அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் கால் பதித்தார் ராஷ்மிகா. இவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். ஒரு படத்திலாவது அவருடன் நடித்து விட்டால் போதும் என்று ஒரு பேட்டியில் கூட சொல்லி இருப்பார். இந்நிலையில் தான் ராஷ்மிகா முக்கிய செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது இவர் சிறு வயதில் இருக்கும் போது அவரது அப்பா இவரை நடிகை சௌந்தர்யா போலவே இருப்பதாக சொல்லி இருக்கிறாராம். அதனால் இவருக்கு அவர் மீது அதிக மரியாதை இருக்கிறதாம். அவர் இறக்கும் போது கூட ராஷ்மிகா மிகவும் கவலையில் இருந்தாராம்.
மேலும் அவரது பயோபிக்கில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியுள்ளார். இப்பொழுது ஜெயலலிதா மற்றும் சாவித்ரியின் பயோபிக் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் சௌந்தர்யாவின் திரைப்படம் வர வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக ராஷ்மிகா நடிப்பாராம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்