கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (டிச.15) சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், நெல்லை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னதாக அறிவித்து இருந்தது.
இதைதொடர்ந்து நாளையும் (டிச.16), நாளை மறுநாளும் (டிச.17) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு நாட்களுக்கு 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட்-உம் விடுத்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!