தமிழக நெல் விவசாயிகளே., சம்பா பருவ கொள்முதல் குறித்த அறிவிப்பு., அரசு மாஸ் நடவடிக்கை!!!

0

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நெல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் அனுமதி பெற்று செப்டம்பர் மாதம் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜன.25) நடந்த காவிரி பாசன மாவட்ட ஆட்சித்தலைவர்களின் கூட்டத்தில், காணொளி மூலம் தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “நடப்பாண்டு சம்பா பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார். அதேபோல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

SSC தேர்வில் தேர்ச்சி பெறணுமா?? அப்போ இந்த சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here