தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான, பள்ளிகளை மூடுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு, பெற்றோர்கள் கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பெற்றோர் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்.
அதாவது, இன்னும் இரண்டு மாதங்களில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வர உள்ளதாகவும், கொரோனா பரவல் காரணமாக, அவர்களுக்கான முழு ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாலும், அந்த மாணவர்களுக்கு மட்டும் தற்போது விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோரின் இந்த கோரிக்கையை அரசு விரைவில் பரிசீலனை செய்யும், என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்