தமிழகத்தில் ஊரடங்கு எதிரொலி – அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை!!

0
கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு., இனி கவலையே இல்லை - யுஜிசி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தற்போது உள்ள ஊரடங்கு வருகிற ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதால், அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வருகிற ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று (10-01-2022) அறிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த விடுமுறை வருகிற ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here