தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக 10ம் பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு கால அட்டவணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தேர்வை நடத்த அரசு உத்தரவிட்டது,தேர்வுக்கு வரும் மாணவர்களை சோதித்த பின்னர் அனுமதிக்க வேண்டும் அதற்கான கருவியை பள்ளியே வாங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
தெர்மல் ஸ்கேனரை பள்ளியே வாங்க வேண்டும்
தமிழகத்தில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு தொடங்க உள்ளது,தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்வு நடக்கும் பள்ளிகளில் தொற்று பரவாமல் தடுக்க உரிய ஏற்பாடுகளை செய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அரசு கூறி உள்ளது.அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-தேர்வுக்கு வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி போதுமானதாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கூடுதலாக தேவைப்படின் அருகாமையில் உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் இருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும்,அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனை கருவி (தெர்மல் ஸ்கேனர்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ அல்லது பள்ளியின் வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி பள்ளியில் தயார் நிலையில் வைக்குமாறும், சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |