தமிழகத்தில் மத ரீதியாக புனித யாத்திரை செய்ய விரும்புபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோவில்களுக்கு ஒருமுறையாவது போக மாட்டோமா? என பலரும் ஏங்கி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் 60 வயது எட்டியவர்களை முருகனின் அறுபடை வீடுகளுக்கும் அழைத்துச் செல்லும் புதிய திட்டம், இன்று (ஜன.28) தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இக்கோவில் திருத்தலங்களுக்கு தனிநபராக செல்ல ரூ.50,000 வரை செலவாகும் நிலையில், 207 பேர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த பயணத்திற்கான செலவினை அரசு மானியத்தில் ஏற்றுக்கொண்ட போதும், ஒரு நபருக்கு ரூ.15,830 வரை செலவு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.