தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் மூலம் தமிழக அரசுக்கு வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பண்டிகை நாட்களின் போது மதுக்கடைகளில் கோடிக்கணக்கில் பாட்டில்கள் விற்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு மது பாட்டில்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மது பாட்டில்களின் விலையை உயர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன்படி சாதாரண மற்றும் மீடியம் மதுபானங்கள் பாட்டிலுக்கு பத்து ரூபாயும், ஹால் பாட்டிலுக்கு 20 ரூபாயும், ஃபுல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் உயர்த்தப்படுகிறது. இது தவிர பீர் ரகங்கள் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் மது பாட்டில்களின் விலை உயர்வு பிப்ரவரி ஒன்று முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வு பயிற்சிக்கான மாஸ் அப்டேட்., சுலபமாக வெற்றி பெற இது போதும்?