இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இருதரப்பினரிடையே நடந்து வந்த போரால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
முதல் கட்டமாக இஸ்ரேல் தரப்பில் 30 நாட்களுக்கு போரை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு ஈடாக அக்.7-அன்று ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற இஸ்ரேல் பிணைக்கைதி 100-க்கும் மேற்பட்டவர்களை விடுவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் மூலம் காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போதுமான வாழ்வாதார உதவிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு., வெளியான முக்கிய தகவல்!!!