தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1700ஐ நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் இதுவரை 1683 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 90 பேர் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 (44.68%) ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 23,303 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 59,952 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.
இன்று குணமடைந்து வீடு திரும்பிய 90 பேரில் அதிகபட்சமாக ஈரோட்டில் 29, கோவையில் 27 மற்றும் நெல்லையில் 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
- சென்னை – 400 பேர்
- கோவை – 134 பேர்
- திருப்பூர் – 110 பேர்
- திண்டுக்கல் – 80 பேர்
- ஈரோடு – 70 பேர்
- நெல்லை – 63 பேர்
- செங்கல்பட்டு – 57 பேர்
- தஞ்சை – 55 பேர்
- நாமக்கல் – 55 பேர்
- திருச்சி – 51 பேர்
- மதுரை – 52 பேர்
- நாகை – 44 பேர்
- தேனி – 43 பேர்
- கரூர் – 42 பேர்
- விழுப்புரம் – 42 பேர்
- திருவள்ளூர் – 50 பேர்
- ராணிப்பேட்டை – 39 பேர்
- தென்காசி – 32 பேர்
- திருவாரூர் – 29 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |