தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் விரைவாக நிரம்பி வருகிறது. அதன்படி தற்போது கிழக்கு திசை மாறுபாடு காரணமாக தமிழகத்திற்கு இன்றும் (டிச. 16) நாளையும் (டிச.17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.