தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காணப்பட்டதால், ஜூன் 11ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த விடுமுறைகளை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். இதனால் வாரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் விடுமுறையா? என ஏங்கி வரும் மாணவர்களுக்கு பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்டங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!
அந்த வகையில் வருகிற ஜூலை 29 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிறு விடுமுறை வேற வர இருப்பதால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையை சிறப்பிக்க ஆவலுடன் மாணவர்கள் காத்திருக்கின்றனர்.