தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது பொதுமக்கள் விழாக்களை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நேரங்களில் மக்கள் அவதியுறாமல் இருக்க தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை அறிவிப்பது வழக்கம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் தற்போது கும்பகோணம் கோட்டத்தின் போக்குவரத்து மேலாண் இயக்குனர் மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வாரத்தின் இறுதி நாட்கள் ஆன ஜூலை 8(சனிக்கிழமை), 9 (ஞாயிற்றுக்கிழமை) ஆம் தேதி விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.., ஒப்புதல் வழங்கி முதல்வர் அதிரடி!!!
இதனால் கூட்ட நெரிசலில் தவிக்காமல் இருக்க அந்த நாட்களில் 300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த 300 சிறப்பு பேருந்துகளும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.