இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிர் தப்பித்தார். இந்த விபத்தில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு காலில் அடி மிகவும் பலமாக ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக IPL, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை தவறவிட்டார். இதனால் இந்திய ரசிகர்கள் மீண்டும் ரிஷப் பண்ட் உடல்நிலை சரியாகி எப்போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்தனர். இந்நிலையில் ரிஷப் பண்ட் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
IND VS WI டெஸ்ட் .., விராட் கோலி எடுத்த புது அவதாரம்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!!!
இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரிஷப் பண்ட் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும் இவர் தற்போது சிறு சிறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர் நிச்சயம் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.