மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) படி மே மாதத்திற்கான புள்ளி விவரம் 0.5 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வெளிவர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.