பொதுவாக அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிடும் பட்சத்தில், அவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பணிபுரியும் போலீசார்களுக்கு, வாரிசு வேலை வழங்குவதில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
அதன்படி,
- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இறந்து போனாலும்,
- காணாமல் போன நிலையில், ஓய்வு பெறுவதற்கு முன்பாக இறந்துவிட்டார் என தெரிந்தாலும்,
- ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருந்தாலும், அந்த போலீஸ்காரரின் வாரிசுகள், கருணை அடிப்படையில் அரசு வேலை பெறுவதற்கு தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!