தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த தேர்வினை மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் 11 ம வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடம் நடைபெற உள்ளது. மேலும் தேர்வில் எந்த ஒரு முறை தேடும் நடைபெறாமல் இருக்க பறக்கும் படை பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்றும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு துறை கண்காணிப்பாளர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., ₹ 16,396 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here