தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு நடவடிக்கையால், ஐந்து லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
மனைவி குறித்த கேள்வி.. கோவமான லோகேஷ் கனகராஜ்.. முழு விவரம் உள்ளே!!
இதன்மூலம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமாக 6.23 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அதில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8.465 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த தேர்தலை விட கூடுதலாக 177 வாக்குச்சாவடி சேர்த்து 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 4 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.