தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் பாசன வசதிக்காக தினசரி 24,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக கர்நாடக அரசு சார்பில், “நடப்பு ஆண்டில் மழைப்பொழிவு குறைந்த அளவே பெய்துள்ளதால், டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பான நிபுணத்துவம் எங்களுக்கு இல்லை. எனவே இதற்கான ஆணையம் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி திங்கட்கிழமை கூடுகிறது. அப்போது தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விடக் கூடிய தண்ணீர் அளவு குறித்து முடிவு எடுக்கப்படும்.” என கூறி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
சென்னை வாசிகளே.., இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.., கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்!!