தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மேற்கு திசை மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் இன்று (ஜூலை 6) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு நாளை வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர்.., காலை கழுவிய முதலமைச்சர்!!
அதேபோல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தி உள்ளனர்.