முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர்.., காலை கழுவிய முதலமைச்சர்!!

0
முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர்.., காலை கழுவிய முதலமைச்சர்!!
முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர்.., காலை கழுவிய முதலமைச்சர்!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பல விஷயங்கள் மாறினாலும் சில சமுதாயத்தினரை ஒதுக்குவது வழக்கமாக நடந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல சில சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி தான் வருகிறது. அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியின சிறுவனுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து அந்த வீடியோவை பார்த்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் சிறுவன் முகத்தில் சிறுநீர் கழித்தவர் பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் நெருங்கிய உதவியாளரான பிரவேஷ் சுக்லா என அடையாளம் காணப்பட்டு நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக அவர் கட்டிய புது வீடும் இடிக்கப்பட்டது.

தமிழகத்தில் மழை காரணமாக நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

இந்நிலையில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் கழுவினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here