கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ள நீரால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி இருந்தனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாமல் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வந்தனர்.
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்தாலும் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 நிவாரண நிதியும், அத்தியாவசிய பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
உண்மையிலே நீங்க வள்ளல் தான் போங்க.., நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!!!