தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக தற்போது கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பின்பு தமிழகத்தில் திடிரென்று நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணத்தினால் தமிழகத்தில் பள்ளி(12 வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு புதிய முறை தேர்வுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மாணவர்கள் இனி ஆன்லைன் தேர்வை புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.