தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு காலி பணியிடங்களையும் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர், இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று இந்த பணியிடங்களுக்கு தேர்வாளர்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.