தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?? கல்வியமைச்சர் பரபரப்பு பேட்டி!!

0

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா?? என்பது குறித்து மாணவர்கள் பலரும் காத்திருந்த நிலையில் கல்வியமைச்சர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு எப்பொழுது??

தமிழகத்தில் கொரோனா தொற்று தாண்டவம் ஆடி வரும் நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுத்தேர்வுகள் சென்ற வருடம் போல தடைபட்டு விடுமா?? என்ற அச்சத்திலும் பலரும் உள்ளனர். இந்த வருடம் ஓரளவிற்கு கொரோனா கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்து கொண்டிருந்த நமக்கு இந்த இரண்டாவது அலையின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறுமா?? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது.இப்படி இருக்க பொதுத்தேர்வு குறித்த நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கல்வியமைச்சர் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் அவர் கூறியதாவது, சட்டமன்ற தலைவர்களிடமும் ஆலோசனை கேட்க முதல் அறிவுறுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாராம். அதன் பின் பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை ஸ்டாலின் எடுப்பார் என்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறைகள் தயாராகி வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here