தமிழ் திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் பட இயக்கத்தில் களமிறங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பணியில் பிரபலம்:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி. நடிகை ஜோதிகா, சிவகுமார் மூத்த மகன் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியாக மாறி விட்டார். இதனை அடுத்து, ஒரு சில குடும்ப கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். இது போக, நடிகர் கார்த்தி இதுவரை பல முன்னணி படங்களில் நடித்து வந்தார்.
ஏற்கனவே, இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை இயக்கும் புதிய முயற்சியில் களமிறங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இவர்கள் இயக்கும் இந்த படங்களை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், அவர்களின் புதிய பரிணாமத்தை பார்க்க ரசிகர்கள் பலத்த ஆவலில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்