இந்திய அணிக்காக நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என இளம் பந்து வீச்சாளர் பேட்டி அளித்துள்ளார்.
அர்ஷப் தீப் சிங்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை தொடரை இதுவரை அதிரடியாக விளையாடி வருகின்றனர். இதே அதிரடியுடன் நாளை மறுநாள் கத்து குட்டியான ஜிம்பாப்வே அணியுடன் வெற்றி பெற்று விட்டால் நேரடியாக அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்து விடுவார்கள்.
இந்நிலையில் இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளர் அர்ஷப் தீப் சிங் இந்தியாவிற்காக கடைசி வரை சிறப்பாக பந்து வீசுவதே எனது ஆசை என்று பேட்டி அளித்துள்ளார். இவர் நான் இந்திய அணிக்காக வீசும் ஒவ்வொரு பந்திலும் ரன்கள் விட்டுக் கொடுக்காமல் விக்கெட் எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் புதிய மற்றும் பழைய பந்தை கொடுத்தாலும் அதிலும் நான் சிறப்பாக விளையாட ஆசைப்படுகிறேன் என பேட்டி அளித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி, சிறந்த பந்து வீச்சாளருக்கான பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளார். இதே அதிரடியுடன் அவர் தொடர்ந்து விளையாடினால் முதலிடம் பிடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.