சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றை வென்ற பி வி சிந்து உள்ளிட்ட இந்திய வீரர்கள்!!

0
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றை வென்ற பி வி சிந்து உள்ளிட்ட இந்திய வீரர்கள்!!
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றை வென்ற பி வி சிந்து உள்ளிட்ட இந்திய வீரர்கள்!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் பி வி சிந்து தனது முதல் சுற்றில் சுவிட்சர்லாந்த் வீராங்கனையை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்:

சுவிட்சர்லாந்தின் பாசலில் உள்ள செயின்ட் ஜாகோப்ஷேலில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் போட்டியிட்டனர். இதில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி வி சிந்து சுவிட்சர்லாந்தின் ஜென்ஜிரா ஸ்டேடல்மேனை எதிர்கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி வி சிந்து, 21-9 , 21-16 என்ற (2-0) செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், எச்.எஸ் பிரணாய் சீன வீரரை 2-1 (21-17, 19-21, 21-17) என்ற செட் கணக்கில் வீழ்த்தி உள்ளார். இதே பிரிவில், கிடம்பி ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் தங்களது முதல் செட்டை வென்றுள்ளனர். ஆனால், லக்ஷ்யா சென் ஹாங் காங் வீரரிடம் 0-2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளார்.

IND vs AUS: 17 பந்தில் 30 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா…, சிக்ஸரில் சாதனை படைத்து அபாரம்!!

இந்த தொடரின், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் பூன் சின் யுவான்-TC வோங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில், இந்திய ஜோடி தொடர்ந்து 2 செட்டுகளை (21-15, 21-18) கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிருக்கான இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி இந்தோனேஷியா வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here