நடிகர் வடிவேலுவால் அவருடைய உதவியாளர் சொந்த ஊருக்கு ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் வடிவேலு:
கோலிவுட் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வைகைபுயல் வடிவேலு. நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படமோ சரியாக ஓடாமல் மண்ணை கவ்வியது. தற்போது சந்திரமுகி, மாமன்னன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் வடிவேலுவின் உதவியாளர் துண்டை கானம் துணிய கானம் என்று ஓடிய சம்பவம் கோலிவுட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது, பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் வடிவேலு அடாவடி செய்வதுண்டு. தற்போது அது ஓவராக இருப்பதால் படத்தின் தயாரிப்பாளர்கள் வடிவேலுவின் உதவியாளரிடம் காட்டத்தை காட்டி வருகின்றனர். பல பிரச்சனைகளுக்கு பிறகு திருப்பவும் நடிக்க வந்த வடிவேலு இனிமேலாவது திருந்தி விடுவார் என்று நினைத்த நிலையில் அவரின் அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமின்றி சம்பள விஷயம், கால்ஷூட் விஷயம் என எல்லாத்துலையும் வடிவேலுவால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மண்டையை பிச்சு கொள்கின்றனர். அந்த கோபத்தை வடிவேலு மீது காட்ட முடியாமல் அவரின் உதவியாளர் மீது தினம் தினம் காட்டி வந்ததால், உங்க சங்காத்தமே வேண்டாம் என்று சொந்த ஊரு பக்கமே ஓடிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.