‘தமிழர்களின் குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்’ – நடிகர் சூர்யா ஸ்டாலின்கு வாழ்த்து!!

0

மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ளார், இதை தொடந்து பலவாரியான மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவும் “தமிழ்களின் குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்” என வாழ்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா:

நடிகர் சூர்யா தன ட்விட்டர் “முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைத்த வாழ்துக்கள்” என கூறி தன் வாழ்த்து செய்தியை பதிவேற்று உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நடிகர் சூர்யா அந்த ட்வீட்டில் “சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’ கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவம் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சூர்யா தன் ட்வீட்டில் ” ‘முடியுமா நம்மால்?’ என்பது தோல்விக்கு முன்பே வரும் தயக்கம், ‘முடித்தே தீருவோம்!’ என்பது வெற்றிக்கான தொடக்கம்” என்ற கலைஞர் மு.கருணாநிதியின் சொல்லை முதன்மையாக கொண்டு வாழ்த்துரையை தொடங்கியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என கூறி தன் வாழ்த்துரையை நிறைவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here