தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுருளி அருவியில் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. அதனால் வனத்துறையினர் குளிக்க தடை விதித்ததால், சுற்றுலா பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பக்தர்கள் புனித நீராடவும் வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.