இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஓர் சாதனையை படைத்துள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வில் பாஸாக எளிய வழி இதோ.. மிஸ் பண்ணிடாதீங்க!!!
அதாவது ஹைதராபாத் அணி இப்போட்டியில் 277 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்தது. இச்சாதனை படைத்த ஹைதராபாத் அணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.